மதுரை, நெல்லை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 12

மதுரை மற்றும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவோயிஸ்ட்கள் தரப்பில் வாதாடி வந்த மதுரை வழக்கறிஞர் முருகன், அதே வழக்கில் இணைத்துக் கடந்த ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாகக் கோவையில் உள்ள 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். வழக்கறிஞர்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...