கோவை, டிசம்பர் 12
மதுரை மற்றும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவோயிஸ்ட்கள் தரப்பில் வாதாடி வந்த மதுரை வழக்கறிஞர் முருகன், அதே வழக்கில் இணைத்துக் கடந்த ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதன் ஒருபகுதியாகக் கோவையில் உள்ள 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். வழக்கறிஞர்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மதுரை மற்றும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவோயிஸ்ட்கள் தரப்பில் வாதாடி வந்த மதுரை வழக்கறிஞர் முருகன், அதே வழக்கில் இணைத்துக் கடந்த ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர்.
இதன் ஒருபகுதியாகக் கோவையில் உள்ள 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். வழக்கறிஞர்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
