ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடத் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

டிசம்பர் 12

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில், ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. 

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தொகுதியின் எம்பி அல்லது எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும். அதனால், மற்றொரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதால், அரசுக்கு அதிக செலவாகிறது. அதனால், ஒருவர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் படி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அல்லது, ராஜினாமா செய்யும் தொகுதிக்கு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

எம்எல்ஏ தொகுதிக்கு, ஐந்து லட்சம் ரூபாயும், எம்பி தொகுதிக்கு, ரூ.10 லட்சமும் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளோம். மத்திய அரசுக்கு, 2004 மற்றும் 2016ல் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்தியஅரசு தான் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...