கோவையில் 25 நாட்களில் 5 ஏ.டி.எம்.களில் கொள்ளை முயற்சி : தனிப்படை அமைத்து விசாரணை செய்வதாக காவல் ஆணையர் தகவல்

கோவை,டிசம்பர்.11

கோவையில் கடந்த 25 நாட்களில் 5 ஏ.டி.எம்.மையங்களிப் கொள்ளை முயற்சி நடந்த சம்பவங்களில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருவதாக கோவை மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதியில் பல்வேறு வங்கிகளுக்குச் சொந்தமான ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதில் சில ஏ.டி.எம். மையங்களில் பாதுகாவலர் பணியில் உள்ளனர். ஆனால், பல ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு காமிரா மட்டுமே பொருத்தப்பட்டு பாதுகாவலர்கள் இல்லாமல் செயல்பட்டு களில்வருகின்றன. 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் சிலர் இரவு நேரங்களில் ஏ.டி.எம். மையங்களுள் புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்கின்றனர். 

கடந்த 25 நாட்களில் மட்டும் 5 ஏ.டி.எம்  மையங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

நேற்று முன்தினம், ஹோப் காலேஜ் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.3.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். 

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியில் அமைந்துள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. 

இது குறித்து மாநகர காவல்துறை ஆணையர் K. பெரியய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஹோப் காலேஜ் பகுதியில் நடைபெற்ற ஏ.டி.எம். கொள்ளையில் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த ஏ.டி.எம். மையத்திற்கு கார் மூலம் வந்த கொள்ளையர்களின் முகம் தெரிந்துள்ளது. காரில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அது போலீயான நம்பர் என தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ஏழு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகிறோம்" என்றார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...