கோவை, டிசம்பர் 11
கோவை மாவட்டம் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் நிலஅளவை ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இச்சேவையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கிவைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற (டிச.,11) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியின் நகர நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநகராட்சி பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் மனுக்களை எளிதில் சமர்ப்பிக்கவும், நிலப்பதிவேடுகளின் நகல்களை எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் பதிவிறக்கம் செய்யவும் இயலும்.
இந்த நகல்கள் மின்கையொப்பம் செய்யப்பட்டுள்ளதால் இதனை வங்கி மற்றும் சேவைகளுக்கு சமர்ப்பிக்க யாருடைய ஒப்பமும் பெற வேண்டாம். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நகர்புற நில ஆவணங்கள் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இணையவழி சேவையின் மூலமாக எளிதாகவும், விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப்பதிவேட்டின் நகல்களை www.tn.gov.in/eservices என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் நிலஅளவை ஆவணங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இச்சேவையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் இன்று தொடங்கிவைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற (டிச.,11) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு உட்பட்ட நில அளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:- நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இந்திய மின் ஆளுமை நில பதிவுருக்கள் மேலாண்மை திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியின் நகர நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநகராட்சி பகுதியிலுள்ள நிலங்களுக்கு இணையவழியில் பட்டா மாறுதல் மனுக்களை எளிதில் சமர்ப்பிக்கவும், நிலப்பதிவேடுகளின் நகல்களை எவ்வித கட்டணமுமின்றி இணையவழியில் பதிவிறக்கம் செய்யவும் இயலும்.
இந்த நகல்கள் மின்கையொப்பம் செய்யப்பட்டுள்ளதால் இதனை வங்கி மற்றும் சேவைகளுக்கு சமர்ப்பிக்க யாருடைய ஒப்பமும் பெற வேண்டாம். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நகர்புற நில ஆவணங்கள் நகல்களை பெற அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இணையவழி சேவையின் மூலமாக எளிதாகவும், விரைவாகவும் எப்பொழுதும் எங்கிருந்தும் நகர நிலப்பதிவேட்டின் நகல்களை www.tn.gov.in/eservices என்ற இணைய பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.