கோவை, டிசம்பர் 11
செட்டிபாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செட்டிபாளையம் அருகே உள்ள கோவை கார்டன் பகுதியில் சுமார் 55-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், உள்ளூர் திட்டக் குழும அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், முறையாகக் குடிநீர் விநியோகிக்கக் கோரி செட்டிபாளையம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவை கார்டன் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. இது தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பேசுகின்றனர். தண்ணீர் கிடைக்காமல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
செட்டிபாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

செட்டிபாளையம் அருகே உள்ள கோவை கார்டன் பகுதியில் சுமார் 55-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், உள்ளூர் திட்டக் குழும அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஆழ்குழாய் அமைத்தும் தண்ணீர் கிடைக்கப் பெறவில்லை. இதுகுறித்து செட்டிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், முறையாகக் குடிநீர் விநியோகிக்கக் கோரி செட்டிபாளையம் பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவை கார்டன் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. இது தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகள் அலட்சியமாகப் பேசுகின்றனர். தண்ணீர் கிடைக்காமல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.