அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரமா..? : நடிகர் கவுண்டமணி மறுப்பு

டிசம்பர் 11

ஆர்.கே.நகரில் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக வெளியான செய்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குகிறார். அவருக்கு ஆதரவாக நடிகர் செந்தில் வாக்குசேகரிப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவாக, நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் மேற்கொள்வார் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதனை நடிகர் கவுண்டமணி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், இன்று ஒரு காலை நாளிதழில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். நான் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரச்சாரம் செய்யவில்லை. என்னைக் கேட்காமல் அவதூறாகச் செய்தி வெளியிட்டால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...