உதகை மலை ரயிலில் திடீர் கோளாறு : அடிப்படை வசதிகளின்றி வனப்பகுதியில் பரிதவித்த சுற்றுலாப் பயணிகள்

டிசம்பர் 09

குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால், நடுவழியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர். 

பாரம்பரிய சின்னமாக உள்ள நீலகிரி மலை ரயில், யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றுள்ளது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகிறன்றனர். மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுார் வரை பழமை மாறாத பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7:20 மணிக்குப் புறப்பட்டு குன்னுாரை 10:30 மணிக்கு வந்து அடைகிறது. 



இந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் அருகே வந்தடைந்ததது. அப்போது, மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது, திடீரென என்ஜினில் இருந்து புகையும், நெருப்பும் கிளம்பியது. இதனால், என்ஜன் டிரைவர் ரயிலை இயக்காமல், சாதுர்த்தியமாக அங்கேயே நிறுத்தினார். பின்னர், குன்னுார் ரயில் நிலையத்திற்குத் தகவல் கொடுத்து, அங்கிருந்து மாற்று என்ஜன் அப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, மலை ரயில் நடுக்காட்டில் நின்றதால் 143 சுற்றுலாப் பயணிகள் உணவு தண்ணீர் இன்றி தவித்தனர். மேலும், என்ஜினில் அதிக வெப்பம் ஏற்பட்டதால் என்ஜினிலிருந்து புகைமூட்டமும், தண்ணீரும் வெளியேறியது. இதனால், லோகோ பைலட் பூபதி, உதவி லோகோ பைலட் சதீஷ் மற்றும் ஜெனரேட்டர் ஆப்‌ரேட்டர் வினோத் ஆகியோருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், நீராவித் தண்ணீர் மேல்பட்டதில் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 10.30 மணிக்கு வரவேண்டிய மலைரயில், மாற்று என்ஜின் மூலம் பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...