டிசம்பர் 09
நீலகிரி மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.
குன்னூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.முரளிரம்பாவின் உத்தரவின் பேரில், குன்னூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் அறிவுறுத்தலின்படி, குன்னூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
இந்த விழிப்புணர்வின் போது, இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அதிவேகமாகப் பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும்போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
இந்த விழிப்புணர்வின் போது உடன் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ரகுவரன், திரு. ஜான் மற்றும் திரு. ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.
குன்னூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.முரளிரம்பாவின் உத்தரவின் பேரில், குன்னூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் அறிவுறுத்தலின்படி, குன்னூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
இந்த விழிப்புணர்வின் போது, இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அதிவேகமாகப் பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும்போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.
இந்த விழிப்புணர்வின் போது உடன் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ரகுவரன், திரு. ஜான் மற்றும் திரு. ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.