கோவையில் தூய்மை இடங்கள் பற்றி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்

கோவை, டிசம்பர் 8

தேசிய அளவில் ”தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் ஸ்வச் சர்வெக்ஷான் 2018” குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. டிசம்பர் 15-ம் தேதி ஸ்வச் பாரத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் குறிப்பிட்ட இடங்களை ஆய்வு செய்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது

மாநகராட்சியின் பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஸ்வச் சர்வெக்ஷான் 2018 - தேசிய அளவிலான தூய்மையான நகரங்கள் பட்டியலில், கோவை மாநகராட்சி சென்ற ஆண்டைவிட மிகச்சிறந்த தரப்பட்டியலில் இடம் பெறுவதற்கு தேவையான அனைத்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுமாறும், தரவரிசைப்பட்டியலுக்கு தேவையான உரிய ஆவணங்களை விரைவில் தயார் செய்ய வேண்டும் என அனைத்து மண்டல உதவி ஆணையாளர்களுக்கும், சுகாதார அலுவலகர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. 

மேலும், ஸ்வச் சர்வெக்ஷான் 2018-ஐ முன்னிட்டு பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களில் கடைபிடிக்கப்படும் சுகாதாரப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து மாநகராட்சி அளவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அதனடிப்படையில், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் மற்றும் சுத்தமான கழிப்பறைகள், ஸ்வச் பாரத் குறித்த விழிப்புணர்வு, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரிப்பது போன்ற அம்சங்களைப் பொருத்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். 

ஆகவே, இம்முயற்சியில் பங்குபெற ஆர்வமுள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் தங்களுடைய வளாகங்களில் கடைபிடிக்கப்படும் தூய்மைப்பணிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் முழுவிவரங்களையும் [email protected] என்ற மின்னஞ்சலில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, பெறப்படும் பதிவுகளைக் கொண்டு டிசம்பர் 15-ம் தேதி ஸ்வச் பாரத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளால் குறிப்பிட்ட இடங்களை ஆய்வு செய்து தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...