சிகிச்சையில் இருந்த புற்றுநோயாளியை அழைத்து வந்து ஆணையரிடம் நில மோசடி புகார்

கோவை, டிசம்பர் 8

கோவையில் நில மோசடி தொடர்பாக மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியை அழைத்து வந்து மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி பாக்கியம்.பொங்கலூர் செட்டிபாளையம் பகுதியிலுள்ள அவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கோவில் நிலம் எனக் கூறி திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரகுமார் என்பவர் ஏமாற்றி விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விற்பனை செய்த நிலத்திற்கான பணத்தையும், ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள மூன்று செண்ட் நிலத்தையும் அந்த நபர் மோசடி செய்து விற்றுள்ளார்.

கடந்த மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், பணத்தை வழங்குமாறு கேட்ட பாக்கியத்தை அடித்து விரட்டியுள்ளார். ஏற்கனவே, புற்றுநோயால் பாதிப்படைந்து அவதிப்பட்டு வந்த பாக்கியம், சுந்தரகுமார் தாக்கியதால் மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை கணபதி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் பாக்கியத்தின் சகோதரரான ஆறுமுகம், புகார் அளிப்பதற்காக தனது சகோதரி பாக்கியத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தொடர்ந்து ஆணையர் பெரியய்யாவிடம் சம்பவம் குறித்து புகார் அளித்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுத்த படுக்கையாக உள்ள நோயாளியுடன் ஆணையர் அலுவகத்திற்கு புகார் அளிக்க வந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...