சிகிச்சையில் இருந்த புற்றுநோயாளியை அழைத்து வந்து ஆணையரிடம் நில மோசடி புகார்

கோவை, டிசம்பர் 8

கோவையில் நில மோசடி தொடர்பாக மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளியை அழைத்து வந்து மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி பாக்கியம்.பொங்கலூர் செட்டிபாளையம் பகுதியிலுள்ள அவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை கோவில் நிலம் எனக் கூறி திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரகுமார் என்பவர் ஏமாற்றி விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விற்பனை செய்த நிலத்திற்கான பணத்தையும், ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள மூன்று செண்ட் நிலத்தையும் அந்த நபர் மோசடி செய்து விற்றுள்ளார்.

கடந்த மாதம் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், பணத்தை வழங்குமாறு கேட்ட பாக்கியத்தை அடித்து விரட்டியுள்ளார். ஏற்கனவே, புற்றுநோயால் பாதிப்படைந்து அவதிப்பட்டு வந்த பாக்கியம், சுந்தரகுமார் தாக்கியதால் மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை கணபதி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சூழலில் பாக்கியத்தின் சகோதரரான ஆறுமுகம், புகார் அளிப்பதற்காக தனது சகோதரி பாக்கியத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். தொடர்ந்து ஆணையர் பெரியய்யாவிடம் சம்பவம் குறித்து புகார் அளித்த அவர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் படுத்த படுக்கையாக உள்ள நோயாளியுடன் ஆணையர் அலுவகத்திற்கு புகார் அளிக்க வந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...