காற்றில் விடப்பட்ட பார்க்கிங் கட்டணங்கள் உத்தரவு


கோவை, டிசம்பர் 8

திரையரங்குகளில் வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த கட்டணங்கள் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது ஆனால் கோவையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் இது இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு நிர்ணயப்படி மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய், நகராட்சிக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய், இரு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு 7 ரூபாய், பஞ்சாயத்துக்கு உட்பட்ட திரையரங்குகளில் கார் அல்லது மூன்று சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாய், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கலாம். இதில் சைக்கிள்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால் கோவையில் உள்ள பெரும்பாலன திரையரங்குகளில் இந்த கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் எ. மனோஜ் கூறுகையில், “தமிழக அரசு அறிவித்த கட்டணங்களை கோவையில் உள்ள திரையரங்குகள் இன்னமும் அமல்படுத்தவில்லை. டிக்கெட் விலை உயர்வு, திரையரங்கில் உள்ள உணவுகளின் விலை உயர்வு என பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு டிக்கெட் மற்றும் பார்கிங் கட்டணங்கள் விலையை நிர்ணயம் செய்து உத்தரவிட்டது ஆனால் பார்கிங் கட்டணங்கள் என்ற பெயரில் இன்றும் திரையரங்குகளில் அதிக கட்டணம் தான் வசூலிக்கப்படுகின்றது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் மால்களில் பார்கிங் கட்டணங்கள் வார நாட்களில் ஒரு கட்டணமும், விடுமுறை நாட்களில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது என புகார் தெரிவித்தார்.

மால்களில் கார்களுக்கு ரூபாய் 150 வரையிலும் இருசக்கர வாகனங்களுக்கு ரூபாய் 50 வரையும் பார்கிங் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மால்களில் திரையரங்குக்கு வருவோர் மற்ற கடைகளிலும் பொருட்கள் வாங்குவதால் பார்கிங் நேரம் அதிகரிக்கின்றது அதனால் தான் பார்கிங் கட்டணங்கள் அதிகம் வசூலிக்கப்படுகிறது. திரையரங்குகளுக்கு தான் தமிழக அரசு பார்கிங் கட்டணம் நிர்ணயத்துள்ளது எனினும் மால்களில் பார்கிங் நெருக்கடி குறைக்கவே விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது, விரைவில் திரையரங்குகிற்கு வருவோருக்கு என பார்கிங் வரையறுக்கப்பட்டு தமிழக அரசின் கட்டணம் வாங்கப்படும் என மாலில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழக அரசு நிர்ணயத்துள்ள பார்கிங் கட்டணங்கள் குறித்த உத்தரவு நகல் இன்னமும் எங்களிடம் வந்து சேரவில்லை. தமிழக அரசின் உத்தரவிற்கு முன்பிருந்தே பார்கிங் கட்டணங்கள் குறைவாக தான் வாங்கப்படுகின்றது, உத்தரவு நகல் கிடைத்தவுடன் பார்கிங் கட்டணங்கள் அமல்படுத்தப்படும்,” என கோவை பாபா காம்ப்ளக்ஸ் சினிமாஸ் மேலாளார் எஸ். கிருஷ்ணா கூறினார்.













Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...