கோவையில் அம்பேத்கர் சிலையை நிறுவ அனுமதியளிக்க வலியுறுத்தி சிலை போல் நின்ற வழக்கறிஞர்கள்

கோவை, டிசம்பர் 6

கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலின் முன்புறம் அம்பேத்கர் போல வேடமணிந்த வழக்கறிஞர்கள் சிலையாக நின்றனர்.



கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ அனுமதி வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இதற்கு பல்வேறு அரசுத் துறைகள் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சமூக நீதிக்கட்சியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அம்பேத்கர் போல வேடம் அணிந்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவு வாயில் முன்பு சிலை போல் நின்றனர்.



இதில் தொடர்பாக சமூக நீதிக்கட்சியின் கோவை மாநகர் மாவட்ட தலைவர் ந.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனைத்து துறைகளும் அனுமதி அளித்துவிட்டன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தை கொடுத்துள்ளனர். ஆனால், காவல்துறை மட்டும் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி மறுத்து வருகிறது. அதே நேரத்தில் உரிய அனுமதி பெறாமல் அவினாசி சாலையில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே சட்ட மேதை அம்பேத்கர் முக மூடியை அணிந்து வழக்கறிஞர்கள் சிலை போல் நின்றனர்' இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...