கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி ஆதித்தமிழர் கட்சியனர் ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 6

கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



சட்ட மேதை அம்பேத்கரின் சிலையை கோவையில்  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2009-ம் ஆண்டும் முதல் நிலுவையில் உள்ளது.

இதற்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்காததாக கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து ஆதித் தமிழர் கட்சியினர் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த வெண்மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளோம். சிலை நிறுவ  மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார்.  ஆனால், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக தலைவர்கள் சிலை நிறுவப்படக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சிலை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்து வருகிறத். இதனை கண்டித்து ஆண்டு தோறும் டிசம்பர் 6-ம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனுமதி வழங்கப்படும் வரையில் முற்றுகை போராட்டம் தொடரும்' என்றார். 

இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திடீரென காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.  அவர்களை தடுத்த போலீசார் சுமார் 10 நிமிடம் காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை பூட்டினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...