கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி ஆதித்தமிழர் கட்சியனர் ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 6

கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



சட்ட மேதை அம்பேத்கரின் சிலையை கோவையில்  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2009-ம் ஆண்டும் முதல் நிலுவையில் உள்ளது.

இதற்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்காததாக கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து ஆதித் தமிழர் கட்சியினர் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த வெண்மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளோம். சிலை நிறுவ  மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார்.  ஆனால், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக தலைவர்கள் சிலை நிறுவப்படக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சிலை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்து வருகிறத். இதனை கண்டித்து ஆண்டு தோறும் டிசம்பர் 6-ம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனுமதி வழங்கப்படும் வரையில் முற்றுகை போராட்டம் தொடரும்' என்றார். 

இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திடீரென காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.  அவர்களை தடுத்த போலீசார் சுமார் 10 நிமிடம் காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை பூட்டினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...