பேச்சுவார்த்தைக்கு முன்வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

கோவை, டிசம்பர் 5

ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகத் தொழிலாளர் நலத்துறை மூலம் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2,035 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 300 ஓட்டுநர்கள், கிளீனர்களுக்கு சட்டப்படி ஊதியம், போனஸ், பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்கக்கோரிக் கடந்த அக்டோபர் மாதம் 19 மற்றும் 20-ம் தேதிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து நடந்தப் பேச்சுவார்த்தையில் மூன்று வாரக் காலத்திற்குள் சட்டப்படிச் சம்பளம் மற்றும் போனஸை வழங்குவதாக மாநகராட்சி நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தும், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி தொழிலாளர் நலத்துறையில் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாகத் துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதால் போராட்டம் நடத்த வேண்டாம் எனத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டதின் பேரில், 1-ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

இதனையடுத்து, இன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை சங்கங்கள் சார்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வராத மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து தொழிலாளர் நலத்துறை அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து வீடு திரும்பாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...