கோவையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வடிவமைப்பை மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை, டிசம்பர் 4

கோவை நஞ்சப்பா சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பார்க் கேட்டிலிருந்து டெக்ஸ்டூல் பாலம் வரை ரூ.120 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில், நஞ்சப்பா சாலையிலிருந்து கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, வி.கே.கே.மேனன் சாலை, ஆவாரம்பாளையம் சாலைக்குச் செல்ல வாகன ஓட்டிகள் பாலத்தின் கீழேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, கணபதியிலிருந்து காந்திபுரம் வரவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காந்திபுரம் பகுதிக்கு வர கீழேயே வர வேண்டிய சூழல் உள்ளதால் காந்திபுரம் பகுதியில் எப்போதும் போல போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், பாலத்தின் வடிவமைப்பை மாற்றிப்பதுடன், ரவுண்டானா அமைத்துத் திறக்கப்பட்டுள்ள புதிய பாலத்துடன் இணைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கும் கிராஸ்கட் சாலைக்கு வரக்கூடிய வகையில், தமிழக அரசு முடிவு செய்தபடி சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...