கல்லீரல் நோயாளிகளுக்கு உதவும் வகையில் “மறுவாழ்வு” என்ற குழு தொடக்கம்

கோவை. டிசம்பர் 4

கே.எம்.சி.எச் மருத்துவமனையில் 2014 ஜுலை மாதம் முதல் தற்போது வரை 75 கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சனிக்கிழமை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு துணைபுரியும் வகையில் “மறுவாழ்வு” என்ற குழு தொடங்கப்பட்டது.

இந்த குழு கல்லீரல் நோயாளிகள், அதே போன்ற நோயினை ஏற்கனவே அனுபவித்தவர்களோடு உரையாட மற்றும் அவர்களது பயத்தை போக்கவும், தகவல் அறியவும். கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் மிகவும் உதவியாக இருக்கும் என கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் அனைத்துவகை கல்லீரல் மாற்று அறுவைச்சிகிச்சை வழக்கும் மிகப்பெரிய பிரிவு உள்ளது. இப்பிரிவில் முற்றிய கல்லீரல் புற்று, கணைய புற்று ஆகியவற்றுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது,” என்றார்.

இந்நிகிழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். அவர் பேசுகையில் ” நோய்களில் கொடுமையானது கல்லீரல் நோய்தான் மற்ற எல்லா நோய்களும் முதலே தெரிய வாய்ப்புள்ளது ஆனால் கல்லீரல் மற்றுமே முற்றிலும் முற்றிய பிறகு தான் தெரியவரும் எனவே பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்,” என்றார்.

கோவையில் அனைத்துவகை அதிநவீன தொழில்நுட்பமும் உள்ளது எனவே கல்லீரல் நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக பயப்பட வேண்டாம் என்று கே.எம்.சி.எச் கல்லீரல் பிரிவு தலைவர் மருத்துவர் எஸ். விவேகானந்தன் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...