எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு களைக்கட்டிய அவினாசி சாலை

கோவை, டிசம்பர் 03

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வஉசி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொள்ள கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டுள்ளனர்.



நகரின் பிரதான சாலையில் ஒன்றான அவினாசி சாலையில் தொண்டர்களை உற்சாகமாக வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், இசைக் கச்சேரிகளும் நடைபெற்றன. தையம் நடனம், பொய்க்கால் குதிரை, பறை இசை, கேரள புகழ் செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, எம்ஜிஆர் வேடமணிந்த நடனக் கலைஞர்கள் அவரது பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். கட்சி நிர்வாகிகளின் சார்பில் நாட்டுப்புற இசைக் கச்சேரி ஆங்காங்கே நடத்தப்பட்டது. இதில், தொண்டர்களும் நடனக் கலைஞர்களோடு நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களுக்காக தண்ணீர் தொட்டிகளும், நடமாடும் கழிவறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது.



மேலும், ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து அமைச்சர்களை வரவேற்றனர்.



பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் விமான நிலையம் முதல் விழா மேடை வரை ஈடுபட்டு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.



Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...