கோவை, டிசம்பர் 03
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வஉசி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொள்ள கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டுள்ளனர்.

நகரின் பிரதான சாலையில் ஒன்றான அவினாசி சாலையில் தொண்டர்களை உற்சாகமாக வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், இசைக் கச்சேரிகளும் நடைபெற்றன. தையம் நடனம், பொய்க்கால் குதிரை, பறை இசை, கேரள புகழ் செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, எம்ஜிஆர் வேடமணிந்த நடனக் கலைஞர்கள் அவரது பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். கட்சி நிர்வாகிகளின் சார்பில் நாட்டுப்புற இசைக் கச்சேரி ஆங்காங்கே நடத்தப்பட்டது. இதில், தொண்டர்களும் நடனக் கலைஞர்களோடு நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களுக்காக தண்ணீர் தொட்டிகளும், நடமாடும் கழிவறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து அமைச்சர்களை வரவேற்றனர்.

பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் விமான நிலையம் முதல் விழா மேடை வரை ஈடுபட்டு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வஉசி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொள்ள கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டுள்ளனர்.

நகரின் பிரதான சாலையில் ஒன்றான அவினாசி சாலையில் தொண்டர்களை உற்சாகமாக வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், இசைக் கச்சேரிகளும் நடைபெற்றன. தையம் நடனம், பொய்க்கால் குதிரை, பறை இசை, கேரள புகழ் செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, எம்ஜிஆர் வேடமணிந்த நடனக் கலைஞர்கள் அவரது பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். கட்சி நிர்வாகிகளின் சார்பில் நாட்டுப்புற இசைக் கச்சேரி ஆங்காங்கே நடத்தப்பட்டது. இதில், தொண்டர்களும் நடனக் கலைஞர்களோடு நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களுக்காக தண்ணீர் தொட்டிகளும், நடமாடும் கழிவறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து அமைச்சர்களை வரவேற்றனர்.

பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் விமான நிலையம் முதல் விழா மேடை வரை ஈடுபட்டு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
