விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் குறித்து வழக்கு தொடரப்படும்- எம்.எல்.ஏ கார்த்திக்


கோவை, டிசம்பர் 3

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ந. கார்த்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கோவையில் இன்று நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக விதிமுறையை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த நவம்பர் 30-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக-வால் வழக்கு தொடரப்பட்டது. இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள்போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற ஆணையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் அனுமதியின்றி புதிதாக வைக்கப்பட்டுள்ள கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுக-வினர் மனு அளித்தனர். இருப்பினும், அதிமுக நிர்வாகிகளால் கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் 10 அடி முதல் 30 அடி உயரத்தில் விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற ஆணையை மதிக்காமல் வைக்கப்படும் கட் அவுட்கள், பேனர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை மீது நீதிமன்ற வழக்கு முழு ஆதாரத்துடன் பதியப்படும்.

மேலும், கோவை அண்ணா சிலை அருகே புதிதாக ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி வைத்திருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...