அரசு பேருந்து பாலத்திலிருந்து விழுந்து இரண்டு முதியவர்கள் பலி, முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம்



திருப்பூர், டிசம்பர் 3

அவிநாசியிலிருந்து அன்னூர் நோக்கி அரசு பேருந்து இன்று பிற்பகல் சென்றுகொண்டிருந்தது. அவிநாசியை அடுத்து ஆட்டையம்பாளையம் அருகே செல்லும்போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று அசுர வேகத்தில் முந்திக்கொண்டு பேருந்தை ஒதுக்கியபடி சென்றது. இதில் நிலை தடுமாறிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்து பக்கவாட்டில் சாய்ந்தபடி விழுந்தது. பேருந்தில் பயணம் செய்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் என பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம், அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் அவிநாசி, திருப்பூர் பகுதிகளிலிருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். 



இதில் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த சுண்டப்பன் (70) மற்றும் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (55) ஆகய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 8 பெண்கள், ஒரு குழந்தை, 19 ஆண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களுக்கு அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்தபகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்ததால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

பேருந்து கவிழ்ந்து விபத்துக்-குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...