எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை தவறவிட்டுவிட்டனர்- சீமான்

கோவை, டிசம்பர் 3

புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தனித் தீவு போலக் காட்சியளிப்பதாகவும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை காக்க தவறவிட்டுள்ளனர் என்றும் சீமான் பேட்டியளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தற்போது ஏற்பட்ட புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. அரசு சார்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, மீட்புப் பணிகளும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையற்ற அதிமுக-வினர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

கோவையில் ரகுபதி என்னும் இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பேனர் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நிற்பதாக அமீர் கூறியது குறித்து நாளை முடிவு செய்வோம். மேலும், அன்புசெழியன் விஷயத்தில் அமீருக்கும்  எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலைப் போல் இந்தத் தேர்தலையும் நடிகர் விஷால் நினைக்கிறார், வரட்டும் பார்க்கலாம். திரைப்படத்துறை பாதுகாப்பு இல்லாத துறையாக இருக்கிறது. வட்டிக்கு பணம் பெற்றுத்தான் இந்தத் துறையில் வேலை பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே, அரசு இதனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...