அமைச்சர், எம்.எல்.ஏ.க்களின் புகைப்படங்களுடன் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு


கோவை, நவம்பர் 3

கோவையில் நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் புகைப்படங்களுடன் அ.தி.மு.க.வினர் பிளக்ஸ் பேனர் அமைத்துள்ளனர்.

கோவையில் இன்று நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க தொண்டர்கள் கடந்த இருவார காலமாக சாலைகள் மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 



உயிருடன் இருப்பவர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில வாரங்களுக்கு முன் பிறப்பித்தது. ஆனால், அ.தி.மு.க தொண்டர்களால் நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய முகப்பு பகுதியில் அக்கட்சியினர் ஒரு பிளக்ஸ் போர்டு அமைத்துள்ளனர். அதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் புகைப்படம் உட்பட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.



இது தொடர்பாக, 'ஆளுங்கட்சியினரே நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் செயல்படலாமா?' என்றும், 'நீதிமன்ற உத்தரவை மீறிய ஆளுங்கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்' சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...