பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகளின் மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி அஞ்சலி

கோவை, டிசம்பர் 2

பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யா உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவையொட்டி, இரு தினங்களுக்கு முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். 

இந்த நிலையில், கனிமொழி எம்பி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். பின்னர், ஜிவி ரெசிடென்சியில் உள்ள பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு மறைந்த டாக்டர். வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பொங்கலூர் பழனிச்சாமி, வித்யாவின் கணவரும், மருத்துவ அணி துணை அமைப்பாளருமான டாக்டர் கோகுல், மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி ஆகியோரிடத்தில் ஆறுதல் கூறினார். 

இந்த நிகழ்வின்போது, மாநகர வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...