கோவை, டிசம்பர் 2
பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யா உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவையொட்டி, இரு தினங்களுக்கு முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கனிமொழி எம்பி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். பின்னர், ஜிவி ரெசிடென்சியில் உள்ள பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு மறைந்த டாக்டர். வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பொங்கலூர் பழனிச்சாமி, வித்யாவின் கணவரும், மருத்துவ அணி துணை அமைப்பாளருமான டாக்டர் கோகுல், மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி ஆகியோரிடத்தில் ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, மாநகர வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யா உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவையொட்டி, இரு தினங்களுக்கு முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கனிமொழி எம்பி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். பின்னர், ஜிவி ரெசிடென்சியில் உள்ள பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு மறைந்த டாக்டர். வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பொங்கலூர் பழனிச்சாமி, வித்யாவின் கணவரும், மருத்துவ அணி துணை அமைப்பாளருமான டாக்டர் கோகுல், மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி ஆகியோரிடத்தில் ஆறுதல் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, மாநகர வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.