கோவையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் தொடர்ந்து சேதப்பட்டு வருகின்றன துணை முதலமைச்சர் பெயர் : மீண்டும் கிழிக்கப்பட்டது

கோவை, டிசம்பர் 2

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் இடம்பெற்றிருந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகிறது. 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான 'கட் அவுட் டுகள்' கோவையின் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விழாவுக்காக கோவை வரும் அ.தி.மு.க பிரமுகர்களை வரவேற்கும் பொருட்டு அவினாசி சாலையின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு பேனர்கள் வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவினாசி சாலையில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் (ரெட் பீல்ட்ஸ்) சாலை அருகில் வரவேற்பு பேனர் ஒன்றை அ.தி.மு.க.வினர் அமைத்திருந்தனர்.

அந்த பேனரில்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்  வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ. அருண்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெயரை கத்தியால் கிழித்து பேனரை சேதப்படுத்திச் சென்றனர்.

இந்த சூழலில் இன்று மேலும் ஒரு பிளக்ஸ் பேனரில் இருந்த ஓ.பி.எஸ் பெயர் கிழித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியில் இருந்து சிட்ரா செல்லும் சாலையில் அ.தி.மு.க.வினர் அமைத்த பிளக்ஸ் பேனரில் இருந்த துணை முதலமைச்சரின் பெயரை இன்று மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இது போல் ஹோப்ஸ் பகுதியில் வைக்கப்பட்ட சில பேனர்களும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. 

தொடர்ந்து, துணை முதலமைச்சரின் பெயர் கிழித்து  சேதப்படுத்தப்படுவது அவரின் ஆதரவாளர்களிடையே பெரும் மனவருத்தத்தை   ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...