நிவாரணப் பணிகளுக்காக குமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

டிசம்பர் 02

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஆயிரம் மின்கம்பங்களும், 100-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்தது தெரியவந்தது. இதன் காரணமாக 1,500 மீட்டர் உயர் மின் அழுத்தப் பாதையும், 2,400 மீட்டர் குறைந்த மின் அழுத்தப் பாதையும் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பங்களை மாற்றி, மின்பாதையை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முதல் அவர்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற நகரங்களில் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று 4-வது நாள் ஆன பின்பும் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மின் விநியோகம் முழுமையாக சீரடையவில்லை. இதனால், 29-ந்தேதி இருளில் மூழ்கிய குமரி மாவட்டம் இன்று 4-வது நாளாக இருட்டில் தவிக்கிறது. குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர். 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அந்தத் தொகையின் மூலம் குமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...