உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு 'சமபந்தி போஜனம்'

கோவை, டிசம்பர் 01

 

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் சார்பில் 'சமபந்தி போஜனம்' நிகழ்ச்சி, பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

 

இந்நிகழ்சியில் எச்.ஐ.வி யுடன் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்களோடு சேர்ந்தமர்ந்து பரிமாறப்பட்ட உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.



 

முன்னதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை வரை நடைபெற்றது. பிறகு, எச்.ஐ.வி இல்லா சமூகம் உருவாக்கவும், எச்.ஐ.வி-யுடன் வாழும் மக்களை புறக்கணித்தல் கூடாது எனவும் பேரணியில் பங்கேற்றோர் உறுதிமொழி எடுத்தனர்.



 

இந்நிகழ்ச்சி பற்றி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையாளர், RVM. குமணன் கூறியதாவது, ‘எச்.ஐ.வி நோய் தொற்று உடையவர்களை ஒதுக்குதல் கூடாது என்ற கருத்தை முன்வைத்து 'சமபந்தி போஜனம்' நடத்தப்பட்டது. இதில், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை, எச்.ஐ.வி யுடன் வாழும் மக்களின் அருகில் அமர வைத்து உணவு பரிமாறப்பட்டது. பொதுமக்கள் எச்.ஐ.வி நோய் பற்றியும் எச்.ஐ.வி நோயாளிகளை ஆதரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துகொண்டனர்’ என்று கூறினார்.

 

ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் சம்மேளனம் 1988 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தது. ‘என் நல்வாழ்வு என் உரிமை’ என்ற கருத்தில் உலகம் முழுவதும் இந்த வருட எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

 

‘எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்காமல், அவர்களையும் சக மனிதர்களாக மதித்து நடத்த வேண்டும். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. எச்.ஐ.வி-யுடன் வாழும் மக்களை சமமாக கருத வேண்டும் என்ற கருத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப் படவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நோயாளி ஒருவர்.

 

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் P.G பானுமதி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மருத்துவர் M. சந்திரசேகரன், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகப்பணிகள், மருத்துவர் P. கிருஷ்ணா, துணை இயக்குநர் (குடும்ப நலம்), மருத்துவர் M. சக்திவேல், துணை இயக்குநர் (காசநோய்), மருத்துவர் K. சந்தோஷ்குமார், நகர் நல அலுவலர், மருத்துவர் B. சுந்தரேசன், மாவட்ட திட்ட மேலாளர் (பொறுப்பு), மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...