கோவையில் அனைத்து கட் அவுட், பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு


கோவை, டிசம்பர் 1

கோவை மாநகரில் உள்ள அனைத்து கட் அவுட்கள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் மரு க. விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி (32) என்ற இளைஞர் உயிரிழந்தார் என்று புகார்கள் எழுந்தன. 

இதனைத்தொடர்ந்து, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. ந.கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோவையில் சட்ட விதிமுறைகளை மீறியும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் அமைக்கப்பட்டுள்ள கட் அவுட்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதனையடுத்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உடனடியாக நகரத்தில் உள்ள விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கட்அவுட்களை அகற்ற உத்தரவிட்டுள்ளார். 

வரும் டிசம்பர் 3-ம் தேதியன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் பரவலாக கட் அவுட் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு அதிமுக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோவை மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவினை முன்கூட்டியே எடுத்திருந்தால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி ஒரு இளைஞர் உயிரிழந்திருக்க மாட்டார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் எஸ்.பி. தியாகராஜன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நகரம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் விளம்பரதாரர்களால் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட் அவுட்களை எவ்வித தயக்கமும் இன்றி அதிகாரிகள் அகற்ற வேண்டும். இதன் மூலமே பிற்காலத்தில் விபத்துக்களை தவிர்க்க முடியும் என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...