சின்னியம்பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை ஆய்வு செய்த வைகோ

கோவை, டிசம்பர் 1

சின்னியம்பாளையம் பகுதியில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று ஆய்வு செய்தார்.

கோவையில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கத்தின் போது பல ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டன. அந்த மரங்களுக்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், சட்டவிதியை பின்பற்றாமல் நெடுஞ்சாலைத் துறையினர் போலியாக மரக்கன்றுகள் வைத்து பராமரிப்பதாக கணக்கு காட்டியதைத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் வழக்கு தொடர்ந்தார்.

இதன் விளைவாக சின்னியம்பாளையம் அருகில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த மரக்கன்றுகள் ஐந்து அடி முதல் 10 அடிகள் வரை நன்றாக வளர்ந்துள்ளன.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பூர் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின் கோவை வரும் வழியில் சின்னியம்பாளையத்தில் உள்ள மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...