ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு “சிறந்த ஆசிரியர்கள் விருது”

கோவை, டிசம்பர் 1

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி கிராமப்புற கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சிகளை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் வகையில் “சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கப்பட்டது.இதில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பைச் சேர்ந்த மொத்தம் 25 ஆசிரியர்களுக்கு “சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கப்பட்டது.

“சிறந்த ஆசிரியர்கள் விருது” வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம், சச்சிதாந்த ஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியின் செயலாளர் கவிதாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ஆசிரியர் என்பவர் மருத்துவர்களைப் போன்றவர்கள். மருத்துவர்கள் உடலில் உள்ள நோய்களை போக்குகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள அறியாமை என்ற நோயை போக்குகிறார்கள்.



உலகத்திலேயே சிறந்த கல்வியை வழங்கும் நாடான பின்லாந்தில் உள்ள பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு நான்கு வகுப்பறைகள் இருக்கும். அந்த நான்கிலும் ஒரே சமயத்தில் ஒரே பாடம் நடத்தப்படும். மாணவர்கள் தங்களுக்கு எந்த ஆசிரியரின் வகுப்பு பிடிக்கின்றதோ அந்த வகுப்பறையில் சென்று அமர்ந்து கொள்ளலாம். அங்கு நீதிபதிகளை விட ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகம். இந்தியா ஒரு வளரும் நாடு. முப்பது ஆண்டு மாற்றம் இந்த மூன்று ஆண்டுகளிலேயே நடந்துள்ளது. உலகத்திலேயே அதிகப்படியான சிந்தனை நம்மிடம் உள்ளது' என்றார்.

இதனைத்தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் தலைவர் சாண்டியாகோ ஜேசு பேசுகையில், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற பாடங்களைக் கையாளும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் இரண்டு ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்படுகிறது.



உயர்நிலைப்பள்ளிகளில் 12ஆம் வகுப்பிற்கு 15 முக்கிய பாடங்களைக் கையாளும் ஆசிரியர்கள் தங்கள் முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள்" என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...