கோவை, நவம்பர் 30
கோவையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளால் வாலிபர் உயிரிழந்திருப்பது ஆடம்பர அரசியலின் உச்சக்கட்டம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவினால் உயிரிழந்த ரகுபதி குடும்பத்திற்குத் திரு. ஈஸ்வரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் பணம் பட்டுவாடாவை முழுமையாகத் தேர்தல் ஆணையம் தடுத்ததாகத் தெரியவில்லை. ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், திமுக வேட்பாளர்தான் வெற்றிபெறுவார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிக செலவில் நடத்துவதை மக்கள் விரும்பவில்லை என்பதை ஆளுங்கட்சி புரிந்துகொள்ள வேண்டும். மலேசியா மணல் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளால் வாலிபர் உயிரிழந்திருப்பது ஆடம்பர அரசியலின் உச்சக்கட்டம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவினால் உயிரிழந்த ரகுபதி குடும்பத்திற்குத் திரு. ஈஸ்வரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக அரசு பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் பணம் பட்டுவாடாவை முழுமையாகத் தேர்தல் ஆணையம் தடுத்ததாகத் தெரியவில்லை. ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், திமுக வேட்பாளர்தான் வெற்றிபெறுவார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிக செலவில் நடத்துவதை மக்கள் விரும்பவில்லை என்பதை ஆளுங்கட்சி புரிந்துகொள்ள வேண்டும். மலேசியா மணல் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.