கோவை, நவம்பர் 30
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையடுத்து, கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
கோவை வந்த அவர், ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் வீட்டிற்குச் சென்று, அண்மையில் காலமான வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பொங்கலூர் பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ்பாரி, வித்யாவின் கணவர் டாக்டர். கோகுல் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்தார்.

இதைத்தொடர்ந்து, கோவை திருச்சி சாலை ருக்மணி நகர்ப் பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் மற்றும் ராஜவீதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், ராம் நகரில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்று நலம் விசாரித்தார்.

முன்னதாக, கோவைத் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த மாநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜின் மகன் கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, இராமச்சந்திரன், திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளகோவில் சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் சி.ஆர்.இராமசந்திரன், தமிழ்மணி, முபாரக், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையடுத்து, கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
கோவை வந்த அவர், ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் வீட்டிற்குச் சென்று, அண்மையில் காலமான வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பொங்கலூர் பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ்பாரி, வித்யாவின் கணவர் டாக்டர். கோகுல் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்தார்.

இதைத்தொடர்ந்து, கோவை திருச்சி சாலை ருக்மணி நகர்ப் பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் மற்றும் ராஜவீதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், ராம் நகரில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்று நலம் விசாரித்தார்.

முன்னதாக, கோவைத் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த மாநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜின் மகன் கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, இராமச்சந்திரன், திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளகோவில் சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் சி.ஆர்.இராமசந்திரன், தமிழ்மணி, முபாரக், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆகியோர் உடனிருந்தனர்.