"ஓகி" புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் - கோவை, நீலகிரியிலும் மழைக்கு வாய்ப்பு

நவம்பர் 30

"ஓகி" புயல் காரணமாகக் கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை தீவிரமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுவடைந்தது. இன்று காலை 8.30 குமரிக் கடல் பகுதியில், கன்னியாகுமரியில் இருந்து 70 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. வங்கதேசம் தந்த ஓகி எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவு நோக்கிச் செல்கிறது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரையில், தமிழகம், புதுச்சேரியில் பரவலாக அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இடைவெளி விட்டு சில முறை மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 65கி.மீ., முதல் 75 கி.மீ., வரை பலத்த காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்துடன் காணப்படும். நெல்லை, ராமநாதபுரம், குமரி மாவட்ட மீனவர்கள் 24 மணி நேரத்திற்குக் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...