அமேசான், பேடிஎம் பயன்படுத்தவும் இனி ஆதார் கட்டாயம்

மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், இனி அமேசான், பேடிஎம் போன்றவைகளைப் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு வருகிறது. மொபைல் எண்கள், வங்கிக் கணக்கு ஆகியனவும் ஆதாருடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது இன்டர்நெட் கம்பெனிகளின் சேவைகளை பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக பெங்களூருவைச் சேர்ந்த வாடகை கார் நிறுவனமான ஜூம்கார், வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளத்திற்காக முன்பதிவின் போது ஆதார் எண்ணை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி உள்ளது. ஆதார் எண் இல்லாத புக்கிங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

தற்போது, அமேசான் நிறுவனமும், வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகிறது. ஒருவேளை வாடிக்கையாளர் ஆதார் எண்ணை தர மறுக்கும் பட்சத்தில், அவரைப் பற்றிய பிற விபரங்களை பெற முடிவு செய்துள்ளது. இதே போன்று மொபைல் வேலட்டான பேடிஎம் சேவையை பயன்படுத்தவும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாடகை கார் நிறுவனங்களான ஊபர், ஓலா ஆகியனவும் வாடிக்கையாளர்களை ஆதார் மூலம் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக ஆதார் எண்ணை அளிக்கும்படி கேட்டு வருகின்றன.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...