தொடர் கொலையில் ஈடுபட்டவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை, நவம்பர் 29

ஒரே இரவில் மூன்றுபேரைக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அருகே புங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். சென்ட்ரிங் தொழிலாளியான இவர் குடும்ப வறுமையின் காரணமாக 2013 மார்ச் 28ம் தேதியன்று உறவினர் ஆனந்தகுமார் உடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இவரது நண்பரான வேலுசாமியிடம் (49) ஸ்ரீதர் செலவிற்கு பணம் கேட்டுள்ளார். வேலுசாமி பணம் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி அவரை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாயினை திருடி விட்டு தப்பினார்.

பின்னர் காரமடை கண்ணார்பாளையம் பிரிவு அருகே வந்த ஸ்ரீதர் அங்குள்ள பெட்டிக்கடையை உடைத்து பணம் திருட முயற்சித்த நிலையில், அதைக்கண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற மாரியப்பன் இருவரின் சண்டையை விலக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

தொடர்ந்து அங்கிருந்து காரமடை ரயில் நிலையம் அருகே சென்ற அவர் சாலையோரமாக இருந்த குடிசைக்குள் தலைமறைவாக முயற்சித்த நிலையில் குடிசைக்குள் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சேகர் கூச்சலிட்டுள்ளார். அவரையும் ஸ்ரீதர் கத்தியால் குத்தி கொலைசெய்துவிட்டு தப்பினார்.

ஒரே நாள் இரவில் மூன்று பேரை கொலை செய்த இச்சம்பவம், காரமடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் வேலுசாமி கொலை வழக்கு கோவை 5-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், சேகர் மற்றும் ரமேஷ் கொலை வழக்கு தனித்தனியாக 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது.

இதில், ரமேஷ் கொலை வழக்கின் இறுதிகட்ட விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. விசாரணையின் இறுதியில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...