கோவையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சேலம் புறப்பட்டார் ஹாதியா


கோவை, நவம்பர் 28

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஹாதியா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் புறப்பட்டார்.

கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலா (24) என்பவருக்கும் ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

தனது மகளை ஷபின் ஜகான் மூளைச்சலவை செய்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதற்காகவே திருமணம் செய்துள்ளதாக அகிலாவின் தந்தை அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். 

இவ்வழக்கு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஹாதியா-வை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஹாதியா தனது விருப்பம் போல வாழ உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையில் சித்தா படிப்பை மேற்கொள்ளும் ஹாதியாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கு முடிந்த பின்னர் இன்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஹாதியா இன்று மாலை கோவை வந்தடைந்தார். 

ஹாதியா வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினருக்கான பாதையில் அழைத்து வரப்பட்ட அவர் உடனடியாக போலீஸ் வாகனத்தில் ஏறி பலத்த பாதுகாப்புடன் சேலம் அழைத்துச்செல்லப்பட்டார். 

ஹாதியா வருகையை அறிந்த அவரது ஆதரவாகர்கள், அவருக்கான தங்களது ஆதரவினை காகிதங்களில் எழுதி உயர்த்திக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...