தனியார் பேருந்து நிர்வாகத்தினரின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 27

தனியார் பேருந்து நிர்வாகங்களின் அத்துமீறிய நடவடிக்கைகளைத் தடுக்கக்கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. 



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து முன்னதாக செல்லவேண்டியிருந்தால், அதற்கு முன்பாகவே பயணிகளை ஏற்றி, அரசு பேருந்து ஒட்டுநரை எடுக்கச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.

மேலும், தனியார் பேருந்தின் நிர்வாகிகள் விரைவாக எடுக்கச்சொல்லி அரசு ஓட்டுநரை நிர்பந்தப்படுத்துவதாகவும், தங்களுக்கான நேரத்தை தாண்டியும் பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருப்பதாகவும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆம்னி மற்றும் ரெகுலர் சர்வீஸ் என்ற பெயரில் அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்திற்கு வெளியில் வைத்து அடியாட்களை கொண்டு பயணிகளை நிர்பந்தித்து ஏற்றுவதாக கூறினர். தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டும் அரசுப்பேருந்து ஒட்டுநர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், கொலை மிரட்டல்களும் விடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. வசூலை மையப்படுத்தி அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் பயணிகளின் உடைமைக்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, தனியார் பேருந்து நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் எல்.பி எப்,சி ஐ டியூ உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...