தனியார் பேருந்து நிர்வாகத்தினரின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 27

தனியார் பேருந்து நிர்வாகங்களின் அத்துமீறிய நடவடிக்கைகளைத் தடுக்கக்கோரி அனைத்துத் தொழிற்சங்க அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. 



இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் உள்ளூர்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதில்லை. பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து முன்னதாக செல்லவேண்டியிருந்தால், அதற்கு முன்பாகவே பயணிகளை ஏற்றி, அரசு பேருந்து ஒட்டுநரை எடுக்கச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.

மேலும், தனியார் பேருந்தின் நிர்வாகிகள் விரைவாக எடுக்கச்சொல்லி அரசு ஓட்டுநரை நிர்பந்தப்படுத்துவதாகவும், தங்களுக்கான நேரத்தை தாண்டியும் பயணிகளை ஏற்றுவதில் குறியாக இருப்பதாகவும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆம்னி மற்றும் ரெகுலர் சர்வீஸ் என்ற பெயரில் அனுமதி பெறாமல் பேருந்து நிலையத்திற்கு வெளியில் வைத்து அடியாட்களை கொண்டு பயணிகளை நிர்பந்தித்து ஏற்றுவதாக கூறினர். தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டும் அரசுப்பேருந்து ஒட்டுநர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், கொலை மிரட்டல்களும் விடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. வசூலை மையப்படுத்தி அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் பயணிகளின் உடைமைக்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, தனியார் பேருந்து நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் எல்.பி எப்,சி ஐ டியூ உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்க நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...