கோவை, நவம்பர் 27
அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் வருகின்ற 2018 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் மினிமம் ரூபாய் 30 கி.மீ 15 ரூபாய் கட்டணத்தை மீட்டர் கட்டண அட்டையை காட்டி வசூல் செய்வது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து துணை ஆணையர் பத்திரிக்கையில் கொடுத்த அறிக்கையின்படி தன்னிச்சையாக கட்டணம் முடிவு செய்து அறிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அரசு கட்டணம் நிர்ணயம் செய்யாமல், மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோ டிரைவர்களையும் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆணையாளரின் நடவடிக்கை நியாயமானதல்ல என தெரிவித்தனர்.
மேலும், கார்ப்பரேட் கம்பெனிகளான ஓலா,ஜீகுனு போன்றவை தன்னிச்சையாக முடிவு எடுத்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்ட வசூலிக்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஆதாயம் பெருவதால்தான் துணை ஆணயாளர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றம் சாட்டினர். தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு அமுல்படுத்தவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிக கட்டண வசூலை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டியும் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.
