பிறப்பு, இறப்புச் சான்று பெறக் கட்டணம் அதிரடி உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி

சென்னை : தமிழகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பெறுவதற்கான கட்டணம் 50 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

தமிழகத்தில் பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் உள்ளாட்சி அமைப்புகள், சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சான்றிதழ் பெறுவதற்கு ஒவ்வொரு நிலைக்கும் ஒரு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக இரண்டு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கட்டணம் குறைவாக இருந்ததால் அதைப் பொது மக்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் சில இடங்களில் சான்றிதழ் பெறுவதற்காக பணம் அதிகமாக கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் கட்டண விபரத்தை மாற்றியமைத்து தமிழக அரசு சுகாதார துறை ஆணை வெளியிட்டுள்ளது. இந்த ஆணை சில இடங்களில் முன் தேதியிட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. 

பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் கடந்த மாதம் 26ம் தேதியிட்டு அமல் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்து பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பிறப்பு, இறப்புப் பதிவு செய்ய அந்தந்த பிறப்பு இறப்பு அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து சான்றிதழ் பெற வேண்டும். இறப்போ, பிறப்போ முதல் ஒரு வருடம் மட்டுமே இங்கு சான்றிதழ் பெற இயலும். 

அடுத்த இரண்டு ஆண்டுக்கான சான்றிதழ்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும். மூன்று ஆண்டுகளை கடந்த சான்றிதழ்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் வாங்க வேண்டும். ஆனால் நகராட்சி, மாநகராட்சியில் இது போன்ற அலைச்சல் கிடையாது. ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். இதனிடையே ஆன்லைன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சான்றிதழுக்கான கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முன் இருந்த 2 ரூபாய் கட்டணம் 100 ஆகவும், 5 ரூபாய் கட்டணம் 200 ஆகவும், 10 ரூபாய் கட்டணம் 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு 200 ரூபாய், கூடுதல் நகல் பெற ஒவ்வொரு நகலுக்கும் தலா 200 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. 

பதிவு அலுவலகத்தில் தேடுதல் கட்டணமாக ஒரு வருடத்துக்குட்பட்டது ரூ.100, கூடுதல் ஒவ்வொரு ஆண்டுக்கு ரூ.100, சான்று ஒன்றுக்கு ரூ.200, கூடுதல் சான்று ஒன்றுக்கு ரூ.200, பதிவில்லா சான்று ஆண்டு ஒன்றுக்கு ரூ.2ல் இருந்து 100 என பதிவு அலுவலகத்தில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது போன்று நகராட்சி பகுதிகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Newsletter

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...