தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் காரணம் எனக் கூற முடியாது - சீமான்

நவம்பர் 26

திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் காரணம் எனக் கூற முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரபாகரனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தை சீமான் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை முடிவை தவிர்த்திருக்கலாம். அவரது இழப்பு மனதிற்கு வருத்தமளிக்கிறது. அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என்று சொல்லமுடியாது. அன்புச்செழியன் திரையுலகில் இல்லை என்றால் பாதிப்படங்களுக்கு மேல் வெளியாகி இருக்க முடியாது. சினிமா உலகில் வட்டிக்குக் கடன் வாங்கும் நிலை புதிதல்ல. இது தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடப்போவதாகவும், வரும் 29-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் சீமான் தெரிவித்தார்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...