நவம்பர் 26
திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் காரணம் எனக் கூற முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரபாகரனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தை சீமான் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை முடிவை தவிர்த்திருக்கலாம். அவரது இழப்பு மனதிற்கு வருத்தமளிக்கிறது. அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என்று சொல்லமுடியாது. அன்புச்செழியன் திரையுலகில் இல்லை என்றால் பாதிப்படங்களுக்கு மேல் வெளியாகி இருக்க முடியாது. சினிமா உலகில் வட்டிக்குக் கடன் வாங்கும் நிலை புதிதல்ல. இது தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடப்போவதாகவும், வரும் 29-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் சீமான் தெரிவித்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் காரணம் எனக் கூற முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மதுரவாயலில் பிரபாகரனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் அலுவலகத்தை சீமான் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை முடிவை தவிர்த்திருக்கலாம். அவரது இழப்பு மனதிற்கு வருத்தமளிக்கிறது. அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என்று சொல்லமுடியாது. அன்புச்செழியன் திரையுலகில் இல்லை என்றால் பாதிப்படங்களுக்கு மேல் வெளியாகி இருக்க முடியாது. சினிமா உலகில் வட்டிக்குக் கடன் வாங்கும் நிலை புதிதல்ல. இது தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடப்போவதாகவும், வரும் 29-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என்றும் சீமான் தெரிவித்தார்.