ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு நியமனம்


நவம்பர் 26

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்காக 9 பார்வையாளர்கள் கொண்ட குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அந்தக் குழு வரும் 4-ம் தேதி தமிழகம் வருகிறது.

ஆர்கே நகர் தொகுதியில் டிசம்பர் 21-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அணியினர் கோரியிருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைந்த அதிமுக அணிக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் வழங்கியது. எனவே, இந்த தேர்தலில் ஒருங்கிணைந்த அணி, அதிமுக என்ற பெயரில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதேபோல, டிடிவி தினகரன் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதனால், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கடும் போட்டி நடப்பதற்கு சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பொது பார்வையாளர்கள், செலவினம், காவல் பார்வையாளர்கள் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இந்தக் குழு வருகிற டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்த பின் பார்வையாளர்கள் தங்கள் பணிகளை தொடங்குவார்கள். தேவைக்கேற்ப வாக்குப்பதிவு நெருங்கும் தேதியில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...