எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைத்த அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியான விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை, நவம்பர் 25

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க. சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் அலங்கார நுழைவு வாயில் வைக்கப்பட்டது. சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட இந்த நுழைவு வாயிலில் நேற்று இரவு வாகனம் மோதிய விபத்தில்  சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சூழலில், விபத்துக்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று மாலை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களி கூறியதாவது:- 

நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய அலங்கார வாயிகள் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் அ.தி.மு.க.வினர் தீர்ப்பை மதிக்காமல் பல அடி உயரத்தில் அலங்கார நுழைவு வாயில்களை கோவை மாநகராட்சி பகுதிக்குள் அமைத்துள்ளனர். 

இதனால் ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளார். 

மாநகர காவல்துறை ஆணையர்  இந்த பிரச்சனையில் தலையிட்டு வாலிபர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தால் தி.மு.க.சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...