எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக வைத்த அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியான விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் எம்எல்ஏ மனு

கோவை, நவம்பர் 25

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோவையில் வைக்கப்பட்ட அலங்கார நுழைவாயிலால் வாலிபர் பலியானதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக அ.தி.மு.க. சார்பில் கோவை ஹோப்ஸ் பகுதியில் அலங்கார நுழைவு வாயில் வைக்கப்பட்டது. சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட இந்த நுழைவு வாயிலில் நேற்று இரவு வாகனம் மோதிய விபத்தில்  சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சூழலில், விபத்துக்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று மாலை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகர காவல் ஆணையர் K. பெரியய்யா-விடம் மனு அளித்தார். 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களி கூறியதாவது:- 

நெடுஞ்சாலைகளில் மிகப்பெரிய அலங்கார வாயிகள் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் அ.தி.மு.க.வினர் தீர்ப்பை மதிக்காமல் பல அடி உயரத்தில் அலங்கார நுழைவு வாயில்களை கோவை மாநகராட்சி பகுதிக்குள் அமைத்துள்ளனர். 

இதனால் ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளார். 

மாநகர காவல்துறை ஆணையர்  இந்த பிரச்சனையில் தலையிட்டு வாலிபர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த வாலிபருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்தால் தி.மு.க.சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...