கோவை, நவம்பர் 25
கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலியாகியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு வெற்றி வேலன் (9) என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுவனுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வெற்றி வேலவனுக்கு டெங்குன்காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதை தொடர்ந்து, அவர் கடந்த புதன்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் வைத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று காலை பலியானார்.
டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுவன் பலியாகியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு வெற்றி வேலன் (9) என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுவனுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வெற்றி வேலவனுக்கு டெங்குன்காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
இதை தொடர்ந்து, அவர் கடந்த புதன்கிழமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் வைத்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் இன்று காலை பலியானார்.
டெங்கு காய்ச்சலுக்கு கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.