ஆதிதிராவிடர்களுக்கான தாட்கோ திட்டங்களில் பயன்பெறுவோரின் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, நவம்பர் 24 

தாட்கோ திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் ஆதிதிராவிட இனத்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்படுத்துதல், துரித மின் இணைப்புத் திட்டம், தொழில்முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை அமைத்தல், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், முடநீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி உள்ளிட்ட திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும், மானியத் திட்டத் தொகையில் 50 %, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை நிதியதவி, இந்தியக் குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி -1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர்/ செலவுக்கணக்கர்/ நிறுவன செயலர்களுக்கு நிதியுதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் வரை உள்ளவர்களும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க விரும்புவோர் http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்றிற்கு (பள்ளி மாற்றுச் சான்று/ வாக்காளர் அடையாள அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ பான் கார்டு/ ஆதார் அட்டை/ மதிப்பெண் சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் திட்டத்திற்கான TIN எண் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்ற விலைப்புள்ளி திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூலப்பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று விபரங்களைப் பதிவு செய்து ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். 

தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் பயனடைய மேற்குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விபரங்கள் பெற மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர். பாலசுந்தரம் சாலை அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...