கோவை, நவம்பர் 24
மக்களை ஏமாற்றும் நோக்குடன் திருவிழா காலங்களில் பரிசுக் குலுக்கல் அறிவிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட திருவிழா காலங்களில் வணிக நிறுவனங்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பரிசுக் குலுக்கல் என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையைக் கூட்டி தரமற்ற பொருட்களை விற்பதாகவும், அளவு குறைப்பு, கலப்படப் பொருட்கள், பழைய இருப்பு பொருட்கள் விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் வருகின்றன. வணிகர்களின் இத்தகைய செயல்களினால் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பொதுமக்களும், நுகர்வோர்களும் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டத்தினை அறிவிக்கும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டங்களை அறிவித்து விளம்பரங்களை வெளியிடும் வணிக நிறுவனங்கள் மீது பரிசு குலுக்கல் (தடை) சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978 மற்றும் தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களை ஏமாற்றும் நோக்குடன் திருவிழா காலங்களில் பரிசுக் குலுக்கல் அறிவிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட திருவிழா காலங்களில் வணிக நிறுவனங்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பரிசுக் குலுக்கல் என்ற திட்டத்தின் மூலம் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையைக் கூட்டி தரமற்ற பொருட்களை விற்பதாகவும், அளவு குறைப்பு, கலப்படப் பொருட்கள், பழைய இருப்பு பொருட்கள் விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் வருகின்றன. வணிகர்களின் இத்தகைய செயல்களினால் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
பொதுமக்களும், நுகர்வோர்களும் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டத்தினை அறிவிக்கும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், பொதுமக்களை ஏமாற்றும் நோக்குடன் இதுபோன்று பரிசுக் குலுக்கல் திட்டங்களை அறிவித்து விளம்பரங்களை வெளியிடும் வணிக நிறுவனங்கள் மீது பரிசு குலுக்கல் (தடை) சட்டம் 1955, பரிசு கொண்ட சீட்டுத் திட்டங்கள் மற்றும் பண சுழற்சித் திட்டங்கள் (தடை) சட்டம் 1978 மற்றும் தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் (தடை) சட்டம் 1979 ஆகியவற்றின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.