நவம்பர் 24
நாளை மறுநாள் முதல் நவம்பர் 28-ம் தேதி வரை தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (நவம்.,26) முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களை பொறுத்தவரையில் நவம்பர் 26-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் நவம்பர் 28-ம் தேதி வரை தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தமானது மேற்கு மற்றும் தென்மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் (நவம்.,26) முதல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களை பொறுத்தவரையில் நவம்பர் 26-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரை தமிழகத்தின் தென் கடலோர மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.