கோவை, நவம்பர் 23
யு.பி.எஸ்.சி தேர்வில் காப்பியடித்த விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நிபந்தனை ஜாமினில் இன்று விடுவிக்கப்பட்டார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. ஐ.ஏ.எஸ் பணிக்கான இந்தத் தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரியான சபீர் கரீம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அப்போது, நூதனமுறையில் காப்பி அடித்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தேர்வில் காப்பியடிக்க உதவியதாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தன்னையும் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சபீர் கரீம் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் அளித்தது. இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபீர் கரீம் இன்று விடுவிக்கப்பட்டார்.
யு.பி.எஸ்.சி தேர்வில் காப்பியடித்த விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம் நிபந்தனை ஜாமினில் இன்று விடுவிக்கப்பட்டார்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெற்றது. ஐ.ஏ.எஸ் பணிக்கான இந்தத் தேர்வில் ஐ.பி.எஸ் அதிகாரியான சபீர் கரீம் கலந்து கொண்டு தேர்வு எழுதினார். அப்போது, நூதனமுறையில் காப்பி அடித்ததாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தேர்வில் காப்பியடிக்க உதவியதாக அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தன்னையும் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சபீர் கரீம் மனு அளித்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமின் அளித்தது. இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபீர் கரீம் இன்று விடுவிக்கப்பட்டார்.